Monday, September 7, 2020

ஹிந்தி தினிப்பை ஏற்று கொண்டதன் விளைவு

ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது - பார்ப்பனிய அடிமை சங்கி! 

பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.

வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி,பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது

உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி

ஹரியானா மாநிலத்தின் தாய்மொழி ஹரியாணி

ராஜஸ்தானில் தாய்மொழி கள் ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி,

மத்யபிரதேசத்தின் தாய்மொழிகள் மால்வி,நிமதி,அவதி,பகேலி

காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி, லடாக்கின் மொழி லடாக்கி, 
சட்டீஸ்கரில் தாய்மொழி  சட்டீஸ்கரி,கோர்பா.

ஜார்கன்டில் தாய்மொழி  ஜார்கன்ஷி,சந்த்தலி

மேற்கூறிய  மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன

#ஹிந்து_தெரியாது_போடா

இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி 
வெறும் வாய்மொழியாக கற்பிக்கப்படுவதோடு சரி கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.

சரி மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை 
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.
சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன

தனிப்பட்ட முறையில் ஹிந்தியை கற்றுக் கொள்ள எந்த தடையுமில்லை, இங்கு காலம் காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஹிந்தி பிரச்சார சபாக்களே அதற்கு சாட்சி அதனால் நீ ஹிந்தி கற்றுக் கொள்ளும் தமிழனாக இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை.

மும்மொழி, கல்விக் கொள்கை என்ற பெயரில் திணிக்காதே, ஆளுமை செய்ய நினைக்காதே என்று தான் கூறுகிறோம்

No comments:

Post a Comment