Thursday, February 21, 2019

கர்நாடக காவிரியில் அணைகள் கட்டுவதை தடுக்காமல் விட்டாரா கலைஞர் ??? பதில் உள்ளே

கருணாநிதியின் துரோகம்! காவிரியில் கர்நாடகா அணைகள் கட்டியதைத் தடுக்காமல் தமிழர்களுக்குத் துரோகம் செய்தாரா கலைஞர்? வாட்ஸ் அப் வதந்தி எண்: 7402

இளைஞர்களே, கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்

”கிருஷ்ண ராஜசாகர் அணை கட்டியது 1926

கபினி அணை கட்ட ஆரம்பித்தது 1959

ஹேரங்கி 1964 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது

ஹேமாவதி 1968ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது

கலைஞர் முதல்வரானது 1969ல்தான்

கலைஞர் அரசு புதிய அணைகளை கட்டுவதை எதிர்த்து, தொடுத்த வழக்கை
உச்சநீதிமன்றம் ஏற்காமல், தனது 25.1.1971 தீர்ப்பில் தள்ளுபடி செய்துவிட்டது

ஆனால் கலைஞர் அணை கட்டியதை தடுக்காமல் விட்டுவிட்டாராம்..."

 -எழுதியவர்: A Antony

ஆதாரம் கீழே....

மேலே சொல்லப்பட்டவை, முழுக்க முழுக்க ஆதாரப்பூர்வமான - மறுக்க முடியாத உண்மைகள்...

இது ஒரு உதாரணம்தான்.... திமுக - கலைஞர் மீது சொல்லப்படும் எல்லாக் குற்றச்சட்டுகளும், இது போன்ற ஆதாரமற்ற - பொய்யான - அவதூறுகள்தான்.

2006-2011 திமுக ஆட்சியில், தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்திலிருந்த தமிழகம், 7 ஆண்டு அதிமுகவின் அலங்கோல ஆட்சியில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு, இது போன்ற ஆதாரமற்ற கட்டுக்கதைகளும், அதை வாட்ஸ் அப், இணையத்தில் கண்ணை மூடிக் கொண்டு பரப்பியவர்களுமே முழுக் காரணம்...

        இளைஞர்களே திமுக - கலைஞர் மீது பரப்பப்படும், இது போன்ற ஆதாரமற்ற - பொய்யான - அவதூறுகளை, இனியும் நம்பி - அப்படியே ஃபார்வேர்ட் செய்து பரப்பி, தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாழ்படுத்திய குற்றத்திற்கு உடைந்தையாகாதீர்கள்!

தமிழகத்தின் நலன்விரும்பிகளே, உடன்பிறப்புகளே இது போன்ற உண்மைகளை முடிந்தவரை அதிகம் பரப்புங்கள்...

https://m.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903/190737501760655/?type=3

No comments:

Post a Comment