திமுக தலைவர் ஸ்டாலின் அரசுக்கு அளித்த 9 #அடவைஸ்
சரியான அட்வைஸ் தந்த ஸ்டாலின்.. லேட்டாக முடிவு எடுத்த முதல்வர்
உலகம் முழுக்க போரும், பொருளாதார சீர்குலைவும் ஒரு நாட்டின் தலைவரின் தலைமைப்பண்பை தீர்மானிக்கும். இக்கட்டான சூழ்நிலையில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதுதான் தலைமைப்பண்பை தீர்மானிக்கும். அதில் தற்போது கொரோனா வைரஸை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆம் கொரோனா வைரஸை எப்படி அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், மாநில முதல்வர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் தலைமைப்பண்பு தீர்மானிக்கப்படும். அவர்களின் ஆட்சி அதிகாரம், திறமை முடிவு செய்யப்படும்.
திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தன்னுடைய திறமையை காட்டி உள்ளார். ஒரு எதிர்க்கட்சியாக அரசை எப்படி எல்லாம் வழி நடத்த முடியுமோ அப்படி எல்லாம் தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார்.
ஸ்டாலின் பேசும் நிலவரம்
ஸ்டாலின் நிலவரத்தை பேசுகிறார்
இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லாம்.
நடவடிக்கை -1
#முதலில் தமிழகத்தில் லாக் டவுன் கொண்டு வர வேண்டும் என்று கூறியது #திமுகதான்.
நடவடிக்கை-2
சட்டமன்ற கூட்டத் தொடரை நிறுத்திவிட்டு, எம்எல்ஏக்களை மக்கள் பணி செய்ய அனுப்ப வேண்டும் என்று கூறியது #ஸ்டாலின்தான்.
நடவடிக்கை-3
மக்களை வீட்டிற்குள் அடைக்க வேண்டும், அதே சமயம் அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என்றதும் #திமுகதான்.
நடவடிக்கை-4
மக்களுக்கான #பொருளாதார தேவை குறித்து பேசியது #ஸ்டாலின்தான்.
நடவடிக்கை-5
மிக முக்கியமான மருத்துவமனை நிலை, அதை தயார் செய்வது குறித்தும் திமுக தலைவர் #ஸ்டாலின்தான் முதல் ஆளாக பேசினார்.
நடவடிக்கை-6
கோரிக்கை
ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்
கொரோனா, 144 தடை ஆகிய சூழலில் வெளியூர்வாசிகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்காமல் மக்களை சாலையில் நிறுத்தியிருக்கிறது அரசு. பேருந்துகளைக் குறைத்தால் எப்படி ஊருக்குச் செல்வார்கள் என்கிற எண்ணம் கூடவா இல்லை? உடனே பேருந்துகளை அதிகரித்து, மக்களுக்கு இலவச பயணத்தை அனுமதிக்க வேண்டும், என்று கூறினார். கூட்டம் அதிகம் ஆனால் கொரோனா பரவும் என்பதால் அப்படி கூறினார்.
நடவடிக்கை-7
சம்பளம் குறித்து பேசினார்
அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத சம்பளம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத் தேவைக்கான #நிதியுதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்துதலை பொதுமக்கள் கவனமும், அக்கறையும் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும், என்று கூறினார். ஊழியர்கள் மாத #சம்பளம் குறித்து பேசிய முதல் கட்சி #திமுகதான்.
நடவடிக்கை-8
தேர்வுகள் எப்படி
மேலும், 11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும், என்று மாணவர்களின் நலன் குறித்தும் #திமுகதான் பேசியது. அதிமுக இன்னும் இதில் பிடிவாதமாக இருக்கிறது.
நடவடிக்கை-9
தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள் - இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் #ஸ்டாலின்தான் வலியுறுத்தினார்.
திமுக தற்போது நல்ல எதிர்க்கட்சியாக சரியான ஆலோசனைகளை சரியான நேரத்தில் வழங்கி வருகிறது.
அதிமுகவும் திமுகவின் அட்வைஸ் கேட்டு முடிவுகளை எடுத்து வருகிறது.
No comments:
Post a Comment