Saturday, March 28, 2020

போலியோ ஒழிப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த திராவிட தமிழ்நாடு


பேராசிரியர் 1972ம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சர். கருத்தரங்கு ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்தார். 

போலியோ ஒழிப்பு மருந்து இருப்பதை அறிந்து அதை தமிழகத்தில் இறக்குமதி செய்தார். 

சுகாதார பணியாளர்கள் மூலம் எப்படி கொடுப்பது என்று முதல்வர் கலைஞர் விவாதம் நடத்தினார். 

"ஊசி மருந்து இல்லை தானே, மற்ற துறையான ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மூலமும் கொடுக்கலாமே" என்று கேட்டுவிட்டு நடைமுறைப்படுத்தினார். 

எண்ணிக்கை போதவில்லை. மேலும் ஆட்பலம் தேவைப்படவே மீண்டும் கூட்டம் கூட்டப்பட்டது. 

தனியார் நிறுவனங்கள், NGO க்கள் ரோட்டரி சங்கங்களை அழைத்து அவர்களையும் ஈடுபட செய்யலாமே என்று கலைஞர் கேட்க, 

தனியாரிடம் சென்றால் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர், நிர்வாகம் சரியில்லை என்பார்கள் என்று தலைமை செயலாளர் கூற,

"இந்த அரசாங்கம் ஊனமாக இருந்தாலும் பரவாயில்லை, என் மக்கள் ஊனமாக இருக்க கூடாது"

அவர்களையும் போலியோ ஒழிப்பில் ஈடுபடுத்த உத்தரவிட்டார். 

அப்போது பேராசிரியர் சொன்னார்

"என்னை இரண்டாமிடம் என்று கிண்டல் செய்வார்கள். செய்யட்டும். என்னுள் எழுந்தது பொறி மட்டுமே. ஆனால் அதற்கு செயலாக்கம் கொடுத்தது கலைஞர் தான். செயலூக்கம் உள்ளவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது பெருமையே" என்றார்.

#தமிழகம் 1983ல் போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது. 

#இந்தியா 2019ல் போலியோ இல்லாத நாடாக அறிவித்துக்கொண்டது. 

சத்தமா சொல்லுவோம்டா!!

 *திராவிடத்தால் வாழ்ந்தோம்!*
 *திராவிடத்தால் வாழ்ந்தோம்..!!* 
 *திராவிடத்தால் வாழ்ந்தோம்..!!!*

#ஜீரிசுந்தர்

No comments:

Post a Comment