Monday, March 16, 2020

திமுக தலைவர் ஸ்டாலின் சாதாரணமாக திமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்து விடவில்லை

#கழகத்தலைவர் பாசமிகு #தளபதியார் அவர்கள் அவ்வளவு எளிதில் #தலைமைக்கு வரவில்லை. அவர் கடந்து வந்த பாதை இதோ உங்கள் பார்வைக்கு:

#பிறப்பு : 
1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கருணாநிதி – தயாளு அம்மாளுக்கு 3வது மகனாக பிறந்தார்.
#ரஷ்ய அதிபர் ‘#ஜோசப் ஸ்டாலின்’ நினைவாக தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார் தலைவர் #கலைஞர் கருணாநிதி அவர்கள்.

#கல்விப் பருவம்: 
சென்னை சர்ச் பார்க் பள்ளியில் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பித்தபோது, அவரின் பெயருக்காகவே விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
இதனை தெரிவித்தபோது, மாற்ற வேண்டியது பள்ளியை தான் பெயரை அல்ல என்று கூறினார் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
பின்னர் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்துவ மேனிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

#அரசியல் பிரவேசம் : 
1967ம் ஆண்டு, 14 வயதிலேயே அரசியலில் தந்தையுடன் இணைந்து கால் பதித்தார் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள். அப்போது திமுக முதல் முறையாக ஆட்சி அமைத்திருந்தது.
14 வயதில் கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.முக.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக்கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
1973ம் ஆண்டு திமுக-வின் பொதுக்குழு உறுப்பினரானார்.
14 வயதில் அரசியல் களத்தில் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள்
1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று முதன்முறையாக நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும், ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.

#அவசரக் காலச் சட்டத்திற்கு பிறகு:
1975ம் ஆண்டு அவசரக் காலச் சட்டத்தின்போது உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
1984ம் ஆண்டு திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை வகித்து வந்தார்.
இளைஞர் அண்டி செயலாளராக இருந்தபோது, 1984ம் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியை தழுவினார்.
பின்னர் அதே தொகுதியில், 1989ம் ஆண்டு தேர்தலில் வெற்றியடைந்து சட்டப்பேரவைக்குள் கால் பதித்தார்.

#ராஜிவ் காந்தி கொலைக்கு பின் ஆட்சி 
கலைப்பு: 
1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அப்போது இருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு பின்பு, 1996 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் வெற்றியை தழுவினார் ஸ்டாலின்.
மு.க. ஸ்டாலின் மேயர் பதவியில்
பின்பு, உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நேரடி மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக தேர்வான முதல் மேயர் என்ற பெருமை இவருக்கே உரியது.

#மீண்டும் சட்டப்பேரவைக்குள் ஸ்டாலின்: 
2001 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே, மூன்றாவது முறையாக வெற்றிப்பெற்று சட்டப்பேரவைக்குத் தேர்வானார். அதே ஆண்டு மீண்டும் சென்னை மேயர் பதவி வகித்தார்.
மேயர் பதவியில் ஸ்டாலின்
ஆனால், 2002ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தால் மேயர் பதவியலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், எம்எல்ஏவாகத் தொடர்ந்து இருந்தார்.
திமுக பொருளாளர் மற்றும் துணை 

#முதல்வர் பதவி ஏற்பு: 
2006 பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் 4ஆவது முறையாக வெற்றியடைந்த ஸ்டாலின்,  உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2008ஆம் ஆண்டு திமுக பொருளாளராக பொறுப்பேற்றார்.
2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின்.

#செயல் தலைவர் ஆனார் ஸ்டாலின் : 
2017ம் ஆண்டு ஜனவரி முதல் திமுக தலைவராக இருந்த மு.க. கருணாநிதியின் உடல்நலம் பாதிப்படைந்தது. அப்போது கருணாநிதியால் கட்சி வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட முடியவில்லை.
அப்போது திமுக – வின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஸ்டாலின்.

#திமுக – வின் புதிய 2ம் தலைவர் 
ஸ்டாலின் அவர்கள்: 
முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் மனு தாக்கல் செய்தால்.
திமுக தலைவர் பதவிக்கு எவ்வித போட்டியுமின்றி நேரடியாக தேர்வானார்.
இன்று திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டு அங்கு கட்சியின் புதிய தலைவர் ஸ்டாலின் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறாக இன்றளவும் அரசியலில் முதிர்ந்த அனுபவம் பெற்றவருமாக, கழகத்தை கட்டுகோப்பாக வழி நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment