மாநில சுயாட்சி முக்கியத்துவத்தை இப்போது உணர்ந்து இருப்பார்கள் வட நாட்டு அறிவு மேதைகள்
நன்றி Shine Kumar
#கண்ணுக்கே #தெரியாத #கிருமியை #எதிர்த்து #போராடும் #மாநில #சுயாட்சி #எனும் #ஒற்றை #ஆயுதம்..!!
உலகத்தையே ஆட்டிப்படைத்து , இன்னொரு நாட்டையே தன் படைபலத்தால் குறைந்த நேரத்தில் கபளீகரம் செய்யலாம் என கர்வத்துடன் சுற்றத்திரியும் வல்லரசு நாடுகளையே ஆட்டிப்படைக்கும் ஒரு கிருமியை அழிக்க வழி தெரியாமல் தத்தளிப்பதற்கு பின்னால் இருப்பது அறிவியலின் தோல்வி அல்ல , அது ஒரு நாட்டின் சித்தாந்த்ததின் தோல்வி.
ஆம் அது தான் ஒரு நாட்டில் ஒரே தலைமையின் கீழான அதிகார குவிப்பு ( உதா: ஒரே நாடு ,ஒரே மொழி , ஒரே அதிகாரம் -என இந்தியாவில் ஆக்க துடிக்கும் ஆட்சியாளர்கள்)
இன்று இந்தியா முழுக்க கொரோனாவிற்கு எதிராக மாநில தலைவர்கள்தான் தீவிரமாக போராடி வருகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக ஒடிசா, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவை கூறலாம்.
பினராயி விஜயனால் கேரளாவிலும் , மம்தாவால் மேற்கு வங்கத்திலும் ,பட்நாயக்கால் ஒடிசாவிலும் , உத்தவ் தாக்கரேவால் மகாராஷ்டிராவிலும் தன்னிச்சையான முடிவெடுத்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க முடிகிறதென்றால் , அந்த ஒற்றை ஆயுதத்தின் பெயர் " #மாநில_சுயாட்சி"
மாநில சுயாட்சி இல்லையென்றால், மாநில தலைவர்கள் இல்லையென்றால் இந்த கொரோனா போராட்டத்தில் எப்போதோ இந்தியா தோல்வி அடைந்து இருக்கும்.
அதிகாரம் டெல்லியில் மட்டும் குவிந்து இருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்காது. டெல்லி மட்டும்தான் முடிவு எடுக்கும் என்ற நிலை இருந்து இருந்தால் இந்தியா இதில் தோல்வி அடைந்திருக்கும்.
தலைமை அதிகாரம் மாநிலம் முழுக்க பரவி இருக்கிறது. இதனால் மாநில கட்சிகள் சுயமாக முடிவு எடுக்க முடிகிறது. தங்களுக்கு ஏற்ற சட்டங்களை கொண்டு வர முடிகிறது. இதுதான் கொரோனா போரில் நாம் முன்னே நிற்க காரணம். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற நிலை இருந்து இருந்தால்.. இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி இருக்கும். பிரதமர் மோடி மட்டும்தான் முடிவை எடுப்பார் என்ற நிலை இருந்தால், நினைத்து பார்க்க முடியாத பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும்.
சீனா, அமெரிக்கா, இத்தாலி என்று மூன்று நாடுகளிலும் சக்தி எல்லாம் ஒரே தலைவரிடம் குவிந்து இருக்கிறது. இதுதான் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். சீனா இதை இப்போதுதான் உணர்ந்து கொண்டு இருக்கிறது. இத்தாலி இன்னும் உணரவில்லை.
இப்போதுதான் அதிகார பரவலை சீனா முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மாநில சுயாட்சி உலகம் முழுவதற்கு ஒரு எடுத்துக்கட்டாக மாறி உள்ளது தமிழ்நாடு
ஆம் அதற்கு பின்னால் இருக்கும் சிற்பி
கலைஞர் எனும் ஒற்றை மந்திரச்சொல்.
பிப்ரவரி 10- 1969...
இன்றைக்கு மிகச் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னால், ‘மு.கருணாநிதி என்னும் நான்' என்ற கரகரத்த குரலுடன் சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் முன்னால் தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் கலைஞர்.
1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சிப் பொறுப்பினை ஏற்று தமிழ்நாட்டின் முதல்வர் என்ற பொறுப்பை அவர் வகித்தபோது தனது அனுபவத்திலேயே மத்திய மாநில உறவுகளில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்
அண்ணா மறைவுக்குப் பின்னர் 10-02-1969 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றார் கலைஞர். சாதனை வீரரான கலைஞர் பல அரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். அதில் முக்கியமாக அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக்கு ஒரு வடிவம் கொடுக்கத் தொடங்கினார்.
அண்ணா முன் மொழிந்த மாநில சுயாட்சிக் கொள்கைக்கு கலைஞர் அவர்கள் வடிவம் கொடுத்தார்.
மாநில சுயாட்சிக்கு ராஜமன்னார் குழு அமைத்து ஆராய்ந்து ,1974 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இன்று சீனா அதிகாரப்பரவலை , சுருங்க சொல்லவேண்டுமென்றால் மாநில சுயாட்சியை கையிலெடுக்கிறது ,
இந்தியாவோ , ஒரே நாடு , ஒரே மொழி என்கிறது ,இந்தியா முழுதும் மாநில சுயாட்சி மாநாடுகளை திமுக முன்னெடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது,அவ்வாறு நடத்தினால், இந்தியாவுக்கே தமிழகம் மீண்டும் வழிகாட்டத் தொடங்கும். மாநில சுயாட்சிக் குரல் நாடு முழுதும் எழுந்தால் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பும் அடங்கும்!
No comments:
Post a Comment