Wednesday, March 11, 2020

திமுக மீதும் , தலைவர்கள் மீதும் இதுவரையிலும் கட்டமைக்கப்பட்ட பொய்கள் ஏராளம் , அதை உடைப்பது நம் கடமை.#FakeNews #Part1காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த தலைவருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பொய்யாக பகிரப்பட்டு வந்தது. பாகிஸ்தான் பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்து எந்த ஒரு ட்வீட்டையும் வெளியிடவில்லை.ஒருவேளை ட்வீட் வெளியிட்டு அகற்றினாரா, இது தொடர்பாக பாகிஸ்தான் நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடியபோது அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.மாநிலத்துக்கு அதிக அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று பேசி வரும் கட்சி தி.மு.க. காஷ்மீர் விவகாரத்தில், காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தாமல், சட்டமன்றத்தை முடக்கிவைத்துவிட்டு 370வது பிரிவு நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது அக்கட்சி. அம்மாநில சட்டமன்றத்தின் தீர்மானம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கேட்டு வருவது குறப்பிடத்தக்கது.....#தொடரும் #திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல் #ஒன்றிணைவோம்_திமுக_நட்புகளே தகவல் வழங்கியது : shinkumar

No comments:

Post a Comment