Wednesday, March 25, 2020

வகுப்புரிமை போராட்டம் ; பேராசிரியர் கா. அன்பழகன்

வகுப்புரிமை போராட்டம் ; பேராசிரியர் கா. அன்பழகன்

தகுதி திறமை என்று கூறும் 
துக்ளக் அறிவாளிகளே !!!

எது #தகுதி ??
எது #திறமை ??

வாள் வீசுகின்றார்!!
எங்கள் #இனமான_பேராசிரியர் 

#சமூக நீதியின் தடைக்கல் , மற்றும் அவசியம்  
...................................

பிராமணர்கள் மட்டுமே படிக்கலாம் வேதம் ஓதும் குருவாகலாம் 
அது அவர்களின் கடமை.

மற்றவர்கள் படிப்பது பாவம் 

படித்தால் நாக்கை அறு
கேட்டால் காதில் 
ஈயத்தைக் காய்ச்சி ஊற்று 
தவம் செய்தால் தலையை வெட்டு இப்படிப்பட்ட வர்ணாசிரம நீதி தான் நாட்டில் இருந்தது.

இப்படி ஒரு அளவுகோலை தீர்மானித்து விட்டு தகுதியைப் பற்றி தீர்மானிப்பது என்பது எப்படி நியாயமாகும்

ஒரு சிறு கதை #மூன்று குடும்பங்களின் ஒப்பீடு
...,.........................

#உயர்சாதி :👇

#பார்ப்பன மாணவர்களுக்கு கிடைத்துள்ள வசதி சூழ்நிலை மற்ற
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைப்பது இல்லை

#அட்வகேட் ஆனந்தாச்சாரியின் மூன்றாவது மகன் சந்தானம் இன்டர்மீடியட் வகுப்பு படிக்கிறான்

அவனது பெரியண்ணா 
பட்டாபிராமன் டாக்டர்

தமக்கை சீதாலட்சுமி பிஏ பட்டதாரி

சின்ன அண்ணா ரங்கசாமி என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறான்

#உயர்சாதி ஏழை:

வக்கீல் குமாஸ்தா கோவிந்தசாமி பிள்ளை இரண்டாவது மகன் சண்முகம் இன்டர்மீடியட் வகுப்பில் படிக்கிறான்

அவன் அண்ணன் ஆறுமுகம் எஸ்எஸ்எல்சி பாஸ் செய்துவிட்டு 
தபால் அலுவலகத்தில் 
கிளார்க் வேலையில் உள்ளான்

அவன் தங்கை சரஸ்வதியோ 
நான்காம் வகுப்போடு 
பள்ளியை நிறுத்திவிட்டு 
மணபருவத்தை எட்டி 
வீட்டில் உள்ளார்

இன்னும் சின்ன தம்பியும் தங்கையும் வேறு இருக்கிறார்கள்.

#பிற்படுத்தப்பட்டோர்

#கூலிவேலை செய்து வயிறு கழுவும் குப்பன் மகன் ரத்தினம் 
இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கிறான் 

(ஆச்சரியமாக இருக்கும்)

அவனது தாய் புல் அறுக்கப்போவதும் தமக்கை வக்கீல் வீட்டில் 
கூலி வேலை செய்வதும்
தம்பியும் தங்கையும் ஒரு வேளை உணவுக்கே வாடி வதங்கி கிடப்பதும் அவன் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை 

தகப்பன் எப்பாடுபட்டாவது 
தன்னைப் படிக்க வைக்க முன் வந்த காரணத்தால் அரசாங்க ஸ்காலர்ஷிப் உதவியுடன் தட்டுத் தடுமாறி இண்டர்மீடியட் 
வகுப்பில் படித்து வருகிறான் ரத்தினம்

இந்த மூன்று சமூகங்களை சேர்ந்த மூவரும் ஒரே வகுப்பில் 
ஒரே கல்லூரியில் 
படித்துக் கொண்டு உள்ளனர்.

#சமூக நீதியின் #அவசியம் 

இவர்களுக்கு இடையே உள்ள 
வேறுபாட்டை ஒரு கணம் உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்

அட்வகேட் மகன் சந்தானம் 
10 மணிக்கு ஆஸ்டின் காரில் புறப்பட்டு
கல்லூரிக்கு போகும்முன் 
தந்தையிடம் தலையை சொரிந்து காபிக்கு காசு வாங்கிக்கொண்டு செல்கிறான்.

9.30மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி பேருந்துக்கு காத்திருக்கும் சண்முகதிற்கு ஒருநாள் 
சந்தானம் காரில் இடம் 
கிடைப்பது உண்டு 

ஆனால் ஒவ்வொருநாளும் கார் நிற்கும் என்று எதிர்பார்த்து சண்முகம் ஏமாறவும் இதுவே காரணமாகவும் இருக்கும்

குப்பன் மகன் ரத்தினம்
வயல்வெளி குறுக்கு பாதை 
வீட்டிலேயே அரை வயிறு கால் வயிறு மட்டும் உணவு
அத்துடன் அவிழ்த்து வைத்திருந்த ஆடையை உடுத்திக் கொண்டு 
காலை 9 மணிக்கு புறப்பட்டு 
நான்கு மையில் நடந்து 
கல்லூரியை அடைகிறான்

வக்கீல் மகன் இடைவேளையில் உண்பது விருந்து போல இருக்கும் 

குமஸ்தா மகன் வடை ஒரு காப்பி ஆறுதல் அடைவான் 

கூலிக்காரன் மகன் 
புளிய மரத்தடியிலே களைப்பை 
போக்கி கொள்வான் 
பசிக்கும்போது தம்பி தங்கையை எண்ணி அதை மறப்பான்

மாலையில் வக்கீல் மகன் 
பீச் ரோட்டில் காற்று வாங்கி 
வீடு திரும்புவான்

காப்பி அருந்தி சிறிது ஓய்வாக ரேடியோவில் பாடல் கேட்பான்

மணி 7 ஆனதும் மின்சார விளக்கு விசிறி உடன் படிக்க உட்காருவான்

கணக்கில் சந்தேகம் என்றால் 
சின்ன அண்ணாவை கேட்பான்

ஆங்கிலம் என்றால் 
அக்காவிடம் கேட்பான்

பொது அரசியல் தெரிந்து கொள்ள அப்பாவிடம் பேசுவான்
 
தலைவலி படிக்கும்போது ஏற்பட்டால் டாக்டர் அண்ணாவை  கூப்பிடுவான். 

கல்லூரியில் முதல்வரை தெரிந்து இருப்பதும்
 சமஸ்கிருதத்தில் படிக்காமலே 
மார்க் வாங்குவதும் இவனை படிப்பிலே உற்சாகமூட்டும் கருவியாய் இருக்கும்

இரவு10 ஆனாதும் சாப்பிட்டு 
படுத்து விடுவான்

குமஸ்தாவின் மகனோ
 வீடு திரும்பியதும் 
காபிக்கு வழியில்லையே என்று 
எண்ணி உணவுக்கு காத்திருப்பதும் 
அரிக்கன்லைட்டை 
துடைத்து ஏற்றி வைத்துவிட்டு உட்காருவான்

பக்கத்தில் தம்பியும் தங்கையும் 
சத்தம் போட ஆரம்பித்தால் கோபப்படுவதும் 
சந்தேகம் ஏற்பட்டால் யாரையும் கேட்கவழியில்லையே என திகைப்பான்.

தேவைப்படும் எல்லா புத்தகங்களும் கூட வாங்க முடியாத நிலையில் 
நாம் ஏன் குடும்பத்திற்கும் பாரம் 
படிப்பை விட்டுவிட்டு ஏதேனும் வேலைக்கு போய்விடலாம் என்று எண்ணுவதும் நாம் அறிந்ததுதான்

கூலிக்காரன் மகன் இருட்டும் போது குடிசை வருவான்.

குடும்பத்தார் படும் வேதனை கண்டு துயரம் நெஞ்சை அடைக்கும்

 இரவல் புத்தகங்களை
 அகல் விளக்கு எரியும்வரையில் புரட்டுவான்

 அப்புறம் தெருவிளக்கில் 
படிக்க துவங்குவான்

தலையணை இன்றி 
உடுக்கப் போதுமான உடையில்லாமல் பசி நீங்க போதுமான உணவில்லாமல் குமுறல் அடங்காத மனத்துடன்
தான் படிப்பதே தன் குடும்பத்திற்கு செய்யும் கொடுமை 
இப்படி ஏக்கப் பெருமூச்சோடு 
கண்ணீர் விடுவதுமே 
அவன் படிப்பதற்கு உள்ள சூழ்நிலை என்பதை மனம் உள்ள 
எல்லோரும் அறிவோம்.

வக்கீல் மகனுக்கோ 
படிப்பு உல்லாச ஓடம் 

குமாஸ்தாவின் மகனுக்கு 
படிப்பு ஒரு பாரவண்டி 

கூலிக்காரன் மகனுக்கு 
படிப்பு ஒரு தலைச்சுமை பாரங்கல்.

இந்நிலையில் உள்ள வாழ்வியல் முறையில் படிக்கின்ற மூவரும்
தேர்வில் தேர்ச்சி பெற்று 
வாங்கும் மதிப்பெண் 
உண்மையான தகுதியைக் காட்டும் என்று யார்தான் கூறமுடியும்!? முடியுமா??

சமூகநீதி எங்களுக்கு வேண்டும் #அனைவர்க்கும்_அனைத்தும் என்பதுதான் சமூகநீதி

பசி ஏப்பக்காரர்களை 
பந்தியில் முதலில் அமரவைத்து 
அவர் பசி போக்கிடவே 
முன்னுரிமை தரவேண்டும்

புளிஏப்பக்காரர்களை 
சற்றுப் பொறுத்து அடுத்த பந்தியில்
அமர வைக்கப்படவேண்டும் என்று உணர்த்திடும் 
தத்துவம்தான் 
வகுப்புரிமை 
சமூகநீதி 
இட ஒதுக்கீடு.

  

No comments:

Post a Comment